Enna Ninaithu Ennai |
---|
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ
வாழ்க்கை
கனவுகளை கலைத்தாயோ
ஒரு வாசல் திறந்ததென்று
நினைத்தாயோ
மாய பறவை
ஒன்று வானில் பறந்து
வந்து வாவென
அழைத்ததை கேட்டாயோ
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ
பறவை பறந்து
செல்ல விடுவேனா
அந்த பரம்பொருள்
வந்தாலும் தருவேனா
உன்னை
அழைத்து செல்ல
என்னும் தலைவனிடம்
என்னையே நான் தர
மறுப்பேனா
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ