Enna Senjaalum |
|---|
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
சோத்துல கைய வைக்க
அட ஆத்து தண்ணி வேணும்
இல்ல ஊத்து தண்ணி வேணும்
வாக்குல சுத்தம் வர
நல்ல நாக்கு சுத்தம் வேணும்
இல்ல போக்கு சுத்தம் வேணும்
பட்டுக்கூடை போலிருக்கும்
மனசையெல்லாம் ராசாத்தி
கட்டி வச்ச கோயிலுக்கு கட்டிவிடு ஆராத்தி
சுண்டலு எல்லாம் சாமிக்குத்தான்
எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்குத்தான்
நல்லதை தந்த சாமிக்கு
இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
உள்ளக்குதிரையிது அட
ஊரெல்லாம் சுத்துதடி
காடு மேடெல்லாம் சுத்துதடி
மண்ணு குதிரையில
அட மன்னவன் ஏறுவானா
இல்ல சின்னவன் ஏறுவானா
சுற்றம் உள்ள கோடிசனம்
கூத்துக்கட்டி ஆடுது
தட்டுகிற தாளத்திலே
தப்ப மட்டும் பார்க்குது
நாம குடி இருக்குற ஊருக்குள்ள
ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம்
வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும்
வாழ்வென்னும் பூக்களை அள்ளிக் கொடு
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
