Enna Solli Paduven |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஹோ ஓஒ ஓஒ
என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
அரும்பு மீசை குறும்புக்காரன்
என்று நினைத்தேன் அவன்
ஆயர்பாடிக் கண்ணனென்று
மனதில் வைத்தேன்
கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
இன்று கண்ணெதிரே கண்டவுடன்
என்னை இழந்தேன்
என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
அன்று சொன்ன வார்த்தைகளை
மறந்திட வேண்டும்
இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை
மன்னிக்க வேண்டும்
கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
நான் காலமெல்லாம் கண்ணனோடு
கலந்திட வேண்டும்
வேறென்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்