Enna Sugam |
---|
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஓரிடம் பார்த்த விழி
வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம்
என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி
தேரிடம் கற்ற நடை
எழுதா
ம்ஹும்
கவிதை
ஆஹா அஹா
இவள்தான் அடடா
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹா ஹா ஹா
சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை
சேர்த்திடும் காலம் இது
தேன் கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
மார்கழி நள்ளிரவில்
மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர்த்திருத்தி
கைகளில் சேர்த்தணைத்து
மங்கையின் நெஞ்சினிலே
மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின்
மங்கல வண்ணங்களை
மறைவாய்
ம்ஹும்
ரசித்தேன்
ம்ஹ்ம்ம்
எதையோ நினைத்தேன்
இருவர் : என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹஅஹஹாஹாஹஹஹா
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்