Ennaalum Vaazhvilae Sad |
---|
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ
கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ
கண்ணீரே சொந்தமாகும்
காலம் வந்து சேருமோ
கலையாத துயர் மேகம்
என் வாழ்வில் என்றும் சூழுமோ
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ
உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ
மின்னாத பொன்னைப்போலே
நானும் இங்கே வாழ்வதா
உனையன்றி துணையின்று
என் வாழ்வில் யாருமில்லையே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே