Ennaalum Vaazhviley |
---|
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்
கண்ணாலே காணுகின்ற
காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும்
தேன் பொழிந்தாய்
உன்னாலே எந்தன் உள்ளம்
துள்ளித் துள்ளி ஆடுதே
எல்லை மீறி நிலை மாறி
சல்லாப கானம் பாடுதே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை
உன் முன்னே ஜாதி பேத
வாதமெல்லாம் சாய்வதில்லை
ஊரெல்லாம் ஓய்ந்த போதும்
நீ உறங்கி ஓய்வதில்லை
மண் மீது நீயில்லாது
வாழும் ஜீவன் இல்லையே
மலர் மேலே மணம் போலே
உலாவும் இன்ப ஜோதியே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே