Ennadi Ennadi Oviyame

Ennadi Ennadi Oviyame Song Lyrics In English


என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ஹேய் யாரப் பத்தி பாடுறே

ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க

ம்ம் பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்

பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்

ஏனடி பூட்டுகிறாய்

என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க


ஏ ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும்
காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும்
எம் பொழப்பு எம் பொழப்பு
என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும்
உம் பொழப்பு உம் பொழப்பு

சாரல் மழையோடு வந்தாள்
கோடை வெயிலோடும் வந்தாள்
யாரோ அவள் வீசும் தென்றலே
பாவை அவள் மாலை வந்தாள்
காலை பொழுதோடு சென்றாள்
யாரோ அவள் ஆசை திங்களேஏ

கம்பன் இல்லை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கு தேவையில்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி

என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

தாயின் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அது தானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் விலகாது நிழல் போலே
தொடராதோ அன்பிலே

பத்துத் திங்கள் தானே
அன்னை கொண்ட பாரம்
பின்னே எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
செல்லுகிற பாதை எல்லாம்
சொந்தமென ஆகிறதே
சொர்க்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கிறதே

என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்