Ennadi Mayakkama |
---|
என்னடி மயக்கமா சொல்லடி
என்னடி மயக்கமா சொல்லடி
கட்டுப்படாதே
உனது உரிமையை விட்டுத் தராதே
கட்டுப்படாதே
உனது உரிமையை விட்டுத் தராதே
வெட்கப்படாதே விலக அச்சப்படாதே
வெட்கப்படாதே விலக அச்சப்படாதே
கல்யாணம் என்பதோர் ஒப்பந்தம் தானடி
எப்போதும் மாறலாம் கற்போடு வாழலாம்
என்னடி மயக்கமா சொல்லடி
மஞ்சளோடு குங்குமமும்
மாலைகளும் சூடி
அவள் வாழ்கிறாள் விதவைப்போலே
மஞ்சளோடு குங்குமமும்
மாலைகளும் சூடி
அவள் வாழ்கிறாள் விதவைப்போலே
இவள் வாழாத பெண் என்று ஊராரின் சொல் அம்பு
பாயுமே எந்தன் மேலே
பாயுமே எந்தன் மேலேஏ
ஆஆஅஆ
ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா
மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்
மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்
மனமில்லாததை மணம் என்பது
மாற வேண்டும் விரைவில்
வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி
என்னடி மயக்கமா சொல்லடி
என்னடி மயக்கமா சொல்லடி
அன்பென்ற ஒன்றுதான் பெண் அல்லவா
நம் பண்பாடு பெண்ணுக்கு கண் அல்லவா
தாய்போல வாழ்வதே மகள் அல்லவா
அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா
அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா
ஆஆஅஆ
ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா
ஹ அன்பு என்பதும் பண்பு என்பதும்
சொல்லி வந்ததல்ல
ஆசை என்பதும் தந்தை தாயிடம்
வாங்கி வந்ததல்ல
வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி
கட்டுப்படாதே
உனது உரிமையை விட்டுத் தராதே
வெட்கப்படாதே விலக அச்சப்படாதே
என்னடி மயக்கமா சொல்லடி
என்னடி மயக்கமா சொல்லடி
என்னடி மயக்கமா சொல்லடி
ஹஹஹஹஹா