Ennai Ketkkum |
---|
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
ஹேய் என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை
விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்
ஹா பறக்கின்ற குயில் தன்னை
பிடித்திடப் பார்த்தாயா
காட்டுக் குயில் இசை தனை கூண்டுக்குள் அடைப்பாயா
வாழ்க்கையில் நடப்பதை நடிப்பென நினைத்தாயா
மேடையின் நடிப்பினை வாழ்வென நினைப்பாயா
வேடிக்கை விளையாட்டு உன் பொழுதுபோக்கு
புது உலகின் மாற்றங்களிலே
புரிந்ததடி உனது இதயம்
நான் உனக்கு பகை அல்ல என்னைச் சீண்டாதே
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்
தகிட தக தகிட
தக தகிட தக தகதிமி
தக தகிட தக தகிட தக தகதிமி
மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
தங்கம் என்றாலும் வைரம் என்றாலும்
எதிலும் எனது மனம் லயித்ததில்லை
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எதுவும் எளிதில் என்னை ஜெயித்ததில்லை
கற்கள் அழாது சிற்பம் எழாது
கைகள் தொழாது கண்ணின் மணியே
சொல்லை எடுத்து என்னை அடித்து
சிற்பம் வடித்த சின்னக் கிளியே
எதிர் வரும் காற்றினில் வளையும் நாணல் அல்ல
வளைந்த வில்லிலும் நுழையும் இசையடி
நிஸ்ஸா நிஸ நிஸா
நிஸ கரிஸ நிரி ஸநித ஸநிதபா
ரிக்கா ரிக மரி
ரிக பபப மகரி மகரி ஸநிஸா
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ
நாதிர் தீதர் திமித நாதிர் தீதர் திமித
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் தன
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த நாதிர் தன திரன
ரிர்ரிர்ரி கக்கக்க மம்மம்ம
நிந்நிந்நி ஸஸ்ஸஸ்ஸ
ரிர்ரிர்ரி மம்மம்ம பப்பப்ப தத்தத்த
மப தநி ஸரி கம பமகரி ஸநி ரி
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்