Ennai Mannippaya

Ennai Mannippaya Song Lyrics In English


என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே நேசிப்பாயா
கொஞ்சம் யோசிப்பாயா
என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி

நாடகத்தில் ஏனோ
பாதகத்தை கண்டேன்
காட்சி மாறும்போதே
காதல் கொண்டு நின்றேன்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்

என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி

நேற்று சொன்ன வார்த்தைகள்
பொய்கள் ஊற்றி செய்தது
இன்று சொல்லும் வார்த்தைகள்
உண்மையாலே நெய்தது

முதல் முறை நான் மயங்குகிறேன்
உந்தன் அருகே தயங்குகிறேன்
என்ன சொல்லி என்ன
நீ என்னிடத்தில் இல்லை
உந்தன் பிம்பம் வந்து
கொல்லுதடி கண்ணை
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்

என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி


காதல் எந்தன் வாசலில்
வந்து நின்ற போதிலே
தூங்கி விட்ட பாவி நான்
கண்கள் இன்று நீரிலே

முதல் முறை நீ புரிய வைத்தாய்
முழுவதுமாய் எரிய வைத்தாய்
பட்டதெல்லாம் போதும்
உன் பார்வை வரம் வேண்டும்
சுட்ட பின்பு தானே ஞானம்
வந்து தோன்றும்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்

என்னை மன்னிப்பாயா
இல்லை தண்டிப்பாயா
கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
பெண்ணே நேசிப்பாயா
கொஞ்சம் யோசிப்பாயா
என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி

நாடகத்தில் ஏனோ
பாதகத்தை கண்டேன்
காட்சி மாறும்போதே
காதல் கொண்டு நின்றேன்
உன்னை நான் என்னதான் கேட்கிறேன்