Ennai Panthada Piranthavale

Ennai Panthada Piranthavale Song Lyrics In English


இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்



என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே

உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள
வாராயோ

என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே



செங்குயிலேயே
சிறு வெயிலே சிறு வெயிலே
மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென
செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
உன்னிலுள்ள வளம் என்னதென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே


நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே செங்குயிலே
சிறு வெயிலேயே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே



இனியவனே யே
இணையவனே யே
உன்னைக் காணவில்லை என்னும்போது
நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று
பற்கள் தலையணையைக் கடிக்கும்

உனைத் தொட்டுப் பார்க்க
மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே யே
என்னவனே யே
மூக்குமீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்

என்னை பந்தாட பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் நுழைந்தவனே
உயிரை கண்கொண்டு கடைந்தவனே

உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள
வாராயோ அன்பேயே ஹே