Ennai Saaithaalae

Ennai Saaithaalae Song Lyrics In English


என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல்
நான் வெளியேற தான் பார்த்தேன்

நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்

நேற்று போலே
வானம் அட இன்றும் கூட
நீலம் என் நாட்கள் தான் நீளும்

தள்ளிப் போக
எண்ணும் கால் பக்கம்
வந்து பின்னும் கேட்காதே
யார் சொல்லும்

பறவை நான்
சிறகு நீ நான் காற்றை
வெல்ல ஆசைக் கொண்டேன்

பயணம் நான்
வழிகள் நீ நான் எல்லைத்
தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

மாலை வந்தால்
போதும் ஒரு நூற்றி
பற்றில் தேகம் செங்காந்தள்
போல் காயும்


காற்று வந்து
மோதும் உன் கைகள்
என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்

தவிப்பதை
மறைக்கிறேன் என்
பொய்யை பூட்டி
வைத்துக் கொண்டேன்

கனவிலே
விழிக்கிறேன் என்
கையில் சாவி
ஒன்றைக் கண்டேன்

என்னை சாய்த்தாலே
ராரா ராரா ரா இனி
வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல்
தரை மோதாமல்
இனி மீள்வேனோ
முழுதாக

இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில்
நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாள்

நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்