Ennai Thodarendhu |
---|
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
நாள் தோறும் நினைவில்
நான் வளர்த்தேன் கனவை
நீ தானே மனதில்
நான் சுமக்கும் சிலுவை
தினமும் காலை மாலையும்
வணங்கும் தேவன் ஆலயம்
நாம் கொண்ட உறவைப் போற்றிடும்
நேசங்கள் விளங்க வாழ்த்திடும்
இதழ் தேன் வழங்க நான் மயங்க
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
கேட்காமல் உறவாய்
கிடைத்தவள் நீ எனக்கு
காற்றாய் நீ அணைக்க
கேள்வி எல்லாம் எதற்கு
பிறவி தோறும் கூடுவேன்
உறவு ராகம் பாடுவேன்
நீ இன்றி எனது ஜீவிதம்
நீருக்குள் விழுந்த காகிதம்
அந்த ஏழ் பிறப்பு சேர்ந்திருக்க
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா
ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
நந்தவனமா ஒரு சொந்த வனமா