Ennai Vittu Odipoga Mudiyuma

Ennai Vittu Odipoga Mudiyuma Song Lyrics In English


என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமாஆஅஆஅதெரியுமா

என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர்
இனி தெரியுமாஆஅஆஅதெரியுமா

கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து
அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே
அன்பின் தன்மையை
அறிந்து கொண்ட பின்னே
ஹோஓஓ

உன்னை விட்டு
ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு
என்ன தெரியுமாஆஅஆஅதெரியுமா

அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க
மஞ்சக் கயிரு எடுத்தது
கழுத்தில் முடிக்கும்
இன்ப நாள் தெரியும்போது
ஆஆஆஆஆ

என்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர்
இனி தெரியுமா தெரியுமா

மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி
புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்


இளந்தென்றல் காற்றும்
வளர் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும்
கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில்

இருவர் : ஆஹா ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹாஆஅஆஅ

ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ

உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅஆஅதெரியுமா

உன்னை விட்டு
ஓடி போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன
தெரியுமா ஆஅஆஅதெரியுமா