Ennamma Annamma Achama |
---|
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
வேலி இல்லாத பழமோ நீங்க போடுற மந்திரத்தில் விழுமோ காவல் இல்லாத மனமோ நீங்க காட்டுற வித்தையிலே வருமோ
நான் போடாத மந்திரத்தைப் போட்டாலே போதுமடி ஆடாத பம்பரமும் ஆடுமடியோ
என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்
உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன் ஆசை வைக்க யாருமில்லையே என் மீசைக்கொரு ஜோடி இல்லையே
நீ ஆடோட்டி வந்தவனோ மாடோட்டி வந்தவனோ ஆட்டமிடும் ஆண்டிக்கொரு பொண்ணு வேணுமோ
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா
காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு
காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு கல்யாண சன்யாசியே நீ காசிருந்தா போகலாமைய்யா
நான் அக்காளைக் கேட்கவில்லை தங்கச்சியைப் பார்க்க வந்தேன் அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ
என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா
என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா