Ennamo Seithai Nee |
---|
என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
எதிரில் யாரை
பார்க்கும் போதும் ஹோ
கண்கள் உன்னைய தானே
தேடும் கால்கள் தரையில்
இருக்கும் போதும் ம்ம்
மனசு பறந்து பார்க்க
தோன்றும்
என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
குடைகள் கையில்
இருக்கும் போதும் ம்ம் ஓ
மழையில் நனைந்து பார்க்க
தோன்றும் கொஞ்சம் நெருங்கி
பார்க்க தோன்றும் ம்ம் கொஞ்சம்
விலகி பார்க்கத் தோன்றும்
உன்னை பார்க்கும்
முன்னே உலகம் சிறியதடி
உன்னை பார்த்த பின்னே
உலகம் பெரியதடி ஜன்னல்
திறந்து பார்க்க வைத்தாய்
ஹோ என்னை உணர்ந்து
பார்க்க வைத்தாய்
ஹோ ஓ ஓ ஓ
ஓ ஓ நீ பார்க்கும் பார்வை
ஒருநாள் நான் பார்க்கும்
பார்வையாகும்
எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
தடவைக் கேட்டும் பதில்கள்
இல்லையே
நதியில் மிதிக்கும்
விளக்கு எல்லாம் நதியின்
ஆழம் தெரியவில்லை
தெரிவதில்லை காதல்
எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும்
அறிவதில்லை
என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய் மெதுவாய்
மயில் இறகாய் மனதை வருடுகிறாய்
காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூலோகம்
முழுதும் பூ பூத்து பூக்கோலம்
ஆனது உன்னாலே
எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
எத்தனை தடவைக் கேட்டும்
பதில்கள் இல்லையே
கண்கள் கடிதம்
போட்ட பின்னே ஹோ
கிளிகள் பறந்து வருவதில்லை
கண்கள் விரும்பி
பார்த்த பின்னே ஓ இதயம்
முரண்டு பிடிப்பதில்லை
என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
கொஞ்சம் நெருங்கி பார்க்க
தோன்றும் ம்ம் ஓ
கொஞ்சம் விரும்பி
பார்க்கத் தோன்றும்
கால்கள் தரையில்
இருக்கும் போதும் ஓ ஓ
மனசு பறந்து
பார்க்கத் தோன்றும்