Ennanne Nattukkulle Kadum |
---|
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
வற்றாத காவிரியும்
வளமாய் கோதாவரியும்
பாயும் நாட்டில்
எக்காலும் கங்கையுடன்
எழில் மிகுந்த யமுனை நதி
ஓடும் நாட்டில்
வைகை புருணையுடன்
வாய் இனிக்கும் பாலாறு
ஒய்யும் திருநாட்டில்
உலகு புகழ் நம் நாட்டில்
அய்யகோ அரிசி என
அபயக் குரல் கேக்குதண்ணே
அதைக் கண்டும் சில மனசு
அசையாது இருக்குதண்ணே
அணைகள் கட்டியும் என்ன
பஞ்சாலை உண்டாக்கியும் என்ன
ஆத்துக்கு பாலம் கட்டி
ரோட்டப் போட்டும் என்ன
அணைகள் பல கட்டியதாலே
அதிகம் விளைந்ததல்லவா
அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா
அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
தேனாறும் பாலாறும்
தெருத் தெருவாய்
ஓடும் என்று அன்று கூறி
சிறைச்சாலை அடக்கு முறை
மறுக்காமல் ஒப்புக் கொண்டு
ஒன்று கூடி
உள்ளம் நிலை கொள்ளாமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
இரவு பகல் பாராமல்
ஏர் பிடித்து நிலம் உழுது
விதை விதைத்து காத்திருந்து
அது விளைந்து பார்த்திருந்து
அறுவடையின் நேரத்திலே
கலம் கலமாய் மணி விளைத்து
கஷ்டங்கள் படுவது நாங்க
பொன் காசுகள் பார்ப்பது நீங்க
கூலிக்கு வேலைய செஞ்சும்
வந்து கூலிய கொறச்சது ஏங்க
இத நாங்க சொல்லப் போனா
காவல் போட்டு தடுக்கவா
அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா
அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது