Ennavendru Solvenadi

Ennavendru Solvenadi Song Lyrics In English


என்னவென்று சொல்வேனடி நான் என்னவென்று சொல்வேனடி

என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்

என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம்

கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான் என் கார்குழலை கை விரலால் அளைந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் என்னிதழில் தன்னிதழை கலந்தான் அவன் இன்பரச தேனமுதை எடுத்து வடித்து கொடுத்த விதத்தை

என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம் என்னவென்று சொல்வேனடி

பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் பற்குறியும் நகக்குறியும் பதித்தான் என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான் உயிர்க் காதல் கொஞ்சும் நெஞ்சில் போதை மிஞ்சும் இன்பத்தை


என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம் என்னவென்று சொல்வேனடி

தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான் சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான் போகமழை ரா முழுதும் பொழிந்தான்

போகமழை ரா முழுதும் பொழிந்தான் அந்த புதுமையில் அருமையில் கலவியின் இனிமையில் திளைத்த என் மனநிலையை

என்னவென்று சொல்வேனடி என் பஞ்சணையில் வந்தொருவன் பார்வையிலே தந்த சுகம் என்னவென்று சொல்வேனடி