Ennil Ennil Nee |
---|
என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என
விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
வேர் அருந்த மரமென
தான் சரிந்தது
காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது
மாறும் காலம்
என்றே மாறா காதல்
கொண்டேன் கண்ணுக்குள்
பூட்டி தான் கற்பூரம் ஏற்றி
தான் பூஜித்தேன்
மௌனம் ஒன்றே
உந்தன் பாஷை என்றே
நின்று உன்னை நீ தண்டித்தே
என்னையும் வஞ்சித்தே
வாழ்ந்ததேன்
யார் தந்த சாப
கேடோ துடிக்கிறேன்
கார் மேகம்
கண்ணில் சூழ
தவிக்கிறேன்
முதல் முதலாய்
ஒரு கடிதம் பிறந்தது
முகவரியை எழுது
முன்னே பறந்தது
காதல் தீ தீ
வாட்டுதே கள்ளிப்பால்
பால் ஊட்டுதே
என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என
மின்னும் கானல்
நீரில் காதல் மீனை தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே
எட்டும் தூரம்
கண்ணில் கிட்ட நின்றாய்
நீயும் கண்ணை தான் கட்டி
தான் காட்டுக்குள் தானாய்
தான் சென்றேனே
செவ்வானம்
நாளை மீண்டும்
உதிக்குமோ
செந்தூரம்
உந்தன் கையால்
கிடைக்குமோ
மூடு பனி பாதை
தனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி
அது தோன்றலாம்
காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது
என்னில்
என்னில் நீ என
உன்னில்
உன்னில் நான் என
விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
வேர் அருந்த
மரமென தான் சரிந்தது
காதல் தீ
தீ வாட்டுது
கள்ளிப்பால்
பால் ஊட்டுது
ஆண் & காதல்
தீ தீ வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது என்னில்
என்னில் நீ என