Ennullil Yengo |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
ஆஆ ஆஆஆஆஅஆஆ
பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்
போதையிலே மனம்
பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
மஞ்சளைப் பூசிய மேகங்களே
மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே
ஆஆ ஆஆஆஆஅஆஆ
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து
காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்