Entha Oor Endravane

Entha Oor Endravane Song Lyrics In English


எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா


காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்

கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா