Enthan Kaikuttaiyai |
---|
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா
ஆஆஆஆஆஆ
சின்னச் சின்ன நூல்களில்
பூக்கள் வரைந்தேன் ஆஹா
என்னை வைத்து நான் அதில்
பின்னி இருந்தேன்
கைக்குட்டையில் சின்னம் ஒன்று
கண்டு பிடித்தேன்
பின்னி வைத்த பூவுக்கு
முத்தம் கொடுத்தேன்
காதல் இதயம்
தந்து முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
பின்னி முடித்த
நூல்களுக்குள் நான்
சிக்கித் தவித்தேன்
சிக்கித் தவித்தேன்
சிக்கல் எடுத்தேன்
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா
கைக்குட்டையில் வேர்வையை
துடைத்ததில்லை
அதற்கு வலித்திடும் என்று நான்
மடித்ததில்லை
உந்தன் கையில் தந்தது
துணியும் இல்லை
என் இதயத்தைத்தான் தந்தேன்
வழியும் இல்லை
உன்னை நினைத்தால்
உறக்கம் இல்லை
இன்பக் கிளியே இரக்கம் இல்லை
வாய் திறந்து
என் பெண்மை சொல்வது
வழக்கம் இல்லை
பழக்கம் இல்லை விளக்கம் இல்லை
அந்தக் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
இந்தக் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
இந்தக் காதலி தந்தது
அந்தக் கைக்குட்டையை
யார் எடுத்தது
நான்தான் நான்தான்
நான்தான் நான்தான்