Erimalai Eppadi Porukkum

Erimalai Eppadi Porukkum Song Lyrics In English


எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ரத்தம் இங்கே வேர்வையாக
சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமைக் கையை
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது

ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர்
வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர்
ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆஅஆஆஆஆஅஎ

எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
விதி வசம் என்பதை விட்டு விடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எது நிசம் என்பதை எட்டி விடு


காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே
முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும்
உழவன் வீட்டுத் தேனும் கூட
உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்

செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர்
சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர்
வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்