Erimalai Eppadi Porukkum |
---|
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
ரத்தம் இங்கே வேர்வையாக
சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமைக் கையை
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது
ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர்
வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர்
ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது
மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
ஆஅஆஆஆஆஅஎ
எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
விதி வசம் என்பதை விட்டு விடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எது நிசம் என்பதை எட்டி விடு
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்
காலம் புரண்டு படுக்கும்
நம் கண்ணீர்த் துளியை துடைக்கும்
மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே
முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும்
உழவன் வீட்டுத் தேனும் கூட
உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்
செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர்
சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர்
வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்