Ethanai Iniya Kudumbam

Ethanai Iniya Kudumbam Song Lyrics In English


வாணி ஜெயராம் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன்

எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்
இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும்
கோயில் ஆகாதோ

இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும்
பாடல் கேட்காதோ

என் தெய்வம் நீயே
ஒளி தீபம் நீயே
இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

பிள்ளைகளே புது யுகம் எழுந்தது
ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று
பாடுங்களேன் இனி வரும் தலைமுறை
அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று

அன்புச் செல்வங்களே
கொடியில் ஆடும் முல்லைகளே
உங்கள் உள்ளங்களே
என்றும் எங்கள் செல்வங்களே
உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி
பொன் மாலை சூடி வரும் வானம்பாடி


அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்

யாதும் ஊரே இலக்கியம் சொன்னது
இலக்கணம் ஆனது நேரில் கண்டேன்
யாரும் இங்கே உறவெனும் நினைவிலே
அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்

நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன்
இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன்
நானும் இன்றே தலைவனின் மடியிலே
குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்

உள்ளம் ஒன்றானது
அன்பின் வெள்ளம் உண்டானது
என்றும் மாறாதது
அதிலே இன்பம் நூறானது

என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே

உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்
முத்தமிழ் கவிதை அரங்கம்
தொட்டது துலங்கும் கரங்கள்
நல்லதை நினைக்கும் மனங்கள்