Ettadukku Maligaiyil |
---|
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
இன்று வேறு
பட்டு நின்றானடி
தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி
கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த
காதல் வர
வேண்டாமடி
எந்தன் கோலம்
வர வேண்டாமடி
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
இன்று வேறு
பட்டு நின்றானடி