Ettadukku Maligaiyil

Ettadukku Maligaiyil Song Lyrics In English


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

இன்று வேறு
பட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி

கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி


காலங்கள் உள்ள
வரை கன்னியர்கள் யார்க்கும்
இந்த

காதல் வர
வேண்டாமடி
எந்தன் கோலம்
வர வேண்டாமடி

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

இன்று வேறு
பட்டு நின்றானடி