Ezhai Unakku |
---|
ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
அன்புத் தங்கையும்
துன்பத் தங்கையாய் ஓடுகிறாள் பின்னே
ஏழை அண்ணனும் கோழை அல்லவே
காத்திருப்பாய் கண்ணே
பாசப் பொய்கையை நாசம் செய்தவன்
வேஷம் போடுறானே
வேஷம் என்பதை வாழ்க்கை என்றுதான்
மூடன் நம்புறானே
நல்லதெது கெட்டதெது
நல்லவர்க்கு சொல்லிக் கொடு
கற்றதை நீ கையில் எடு
வா வா தோழனே
ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே
சட்டம் என்பது கெட்டிக்காரனின்
கையில் பொம்மலாட்டம்
தருமம் என்பது ஜீவன் உள்ளது
அறியும் அந்தக் கூட்டம்
காயம் பட்டவன் நியாயம் கேட்பவன்
வாழ வேண்டும் தாயே
கால தேவன் வாழ வைக்கணும்
வாழ்த்து கூறு தாயே
புத்தி உண்டு சக்தி உண்டு
சத்தியத்தில் பக்தி உண்டு
வெற்றி பெறும் நேரம் இன்று
வா வா தோழனே
ஏழை உனக்கொரு காலம் இருக்குது
சூழ்நிலைக் கைதியே
கொடும் ஆசை மனிதர்கள்
ஆடும் கயவர்கள்
வாழ்ந்திடும் பூமியே