Ezhaigalin

Ezhaigalin Song Lyrics In English


ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

காசு இல்லாதவன் கிட்ட வராமலே
கட்டிக் காப்பாத்துற கோயில் உண்டு
ஏழ வந்தாலுமே கூழ தந்தாலுமே
ஏற்றும் உன் கோயில்போல் எங்கே உண்டு

ஆண் பெத்தெடுத்த தாயாட்டம்
குத்தம் கொற பாக்காம
பக்தருக்கு காட்சி தர
காசு பணம் கேக்காம

பெண் மக்களையே ஆதரிக்கும்
மாரியம்மன் நீதானே
மண்ணுலகம் வாழ்த்தோதும்
பெண்ணரசி பொன் மானே

ஆத்தா உன் கண்ணால
பாத்தாலே தன்னாலே
ஆனந்தம் உண்டாகும்
எல்லோர்க்கும் இந்நாளே
வேப்பிலையில் சேலைகட்டி
வீற்றிருக்கும் தேவியே

பெண் ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஆண் ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா


உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

அம்மா உன் காட்சியா
இங்கே உன் சாட்சியா
கன்னிப்பெண் செண்பகம் வந்தாளம்மா
ஆத்தா உன் நாக்குதான்
கூறும் நல்வாக்குதான்
கேட்டா எந்நாளுமே சொன்னாளம்மா

ஆண் நல்ல குறி நீதானே
சொல்ல வேணும் வாயாலே
நன்ம வந்து சேராதோ
காவல் நிக்கும் தாயாலே

பெண் பூச வச்ச பானையில
பொங்க வைப்போம் எல்லாரும்
மாவிளக்க நெய்ய விட்டு
ஏத்தி வைப்போம் நாள் தோறும்

பூப்பூக்கும் காடெல்லாம்
பொன்னாகும் மண்ணெல்லாம்
காப்பாத்தும் அம்மாவ
கொண்டாடும் ஊரெல்லாம்
பாம்பு என்றும் வேம்பு என்றும்
தோன்றுகின்ற மாரியே

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா