Ezhudhugiren Oru Kaditham

Ezhudhugiren Oru Kaditham Song Lyrics In English


முத்து முத்து மகளே
முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில்
சுமந்து கற்பனையில் பெற்ற
கண்மணியே நான் உனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம் வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
வா எழுதுகிறேன் ஒரு கடிதம்

மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் விழ நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த
தாமரையே இரவினில் எழுந்த
சூரியனே எழாமலே எழும் நிலா
நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

முன்னூறு நாள்
கர்ப்பத்திலே வாராத பெண்
நீயடி எந்நாளுமே நான்
பொம்மை தான் என்றாலும்
தாய் தானடி

உலாவும் வானம்
பாடியாய் பண்பாடி வாழ்க
கண்ணே புறாவை போல
சாந்தமாய் பண்பாடு
போற்று பெண்ணே

நாளொரு மேன்மை
நீ பெறுவாய் நான் பெற்ற
இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம்
நீயே எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன்
ஒரு கடிதம்

சிந்தாமணி என்
கண்மணி சிற்றாடை நீ
கட்டடி என் மாளிகை
முற்றத்திலே பொன்
ஊஞ்சல் நீ ஆடடி


குலாவும் அன்பு
கோகிலம் எங்கேயும்
கானம் பாட கனாவில்
கூட சோம்பலே இல்லாமல்
ஞானம் தேட

நல்லவளாக நடை
போடு வல்லவள் ஆகிட
தடை ஏது விழாமலே விழும்
மழை நீயே எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம்

எழுதுகிறேன் ஒரு
கடிதம் எழுதுகிறேன் ஒரு
கடிதம் பொல்லாதது உன்
பூமி தான் போராட்டம் தான்
வாழ்வடி கொல்லாமலே
கொல்வாரடி குற்றங்கள்
சொல்வாரடி

வராத துன்பம்
வாழ்விலே வந்தாலும்
நேரில் மோது பெறாத
வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள்
வேண்டுமடி உரிமைக்கு
போரிட தேவையடி
தொடாமலே சுடும்
கனல் நீயே

வானத்து மலரே
வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
வா எழுதுகிறேன் ஒரு கடிதம்

மலடியின் மகளே
மகள் என்னும் கனவே
மடியினில் விழ நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த
தாமரையே இரவினில் எழுந்த
சூரியனே எழாமலே எழும் நிலா
நீயே எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்