Gaana Kuyile Male

Gaana Kuyile Male Song Lyrics In English


ஓ ஓ ஓ ஓ ஓ

கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட
தென்றல் இன்று தூது செல்லுமா
சொல்லடி என் தோழியே ஓ
சொல்லடி என் தோழியே

கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி

மாடம் மாளிகை கூடம் கோபுரம்
எங்கும் இதயம் செல்லவில்லையே
காதல் தோன்றினால் காணும் பார்வையில்
ஏழை எளிமை என்பதில்லையே

யாரை யாரிடம் காலம் சேர்த்திடும்
யாரும் கூறுவாரோ
பருவ தேவதை போடும் ஆணையை
யாரும் மீறுவாரோ
ஏக்கம் தீர இணைகள் சேர
தென்றல் இன்று தூது செல்லுமா
சொல்லடி என் தோழியே

கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி


ஆசை பூத்தது யாரைக் கேட்டது
தானாய் போனதடி என் மனம்
காலம் கூடுமோ நேரம் வாய்க்குமோ
எந்நாள் சேருமடி சங்கமம்

காட்டில் வாழ்ந்திடும் கிள்ளைக் கூட்டம் போல்
கூட்டில் வாழ வேண்டும்
காலை வேளையும் மாலை வேளையும்
இன்பம் சூழ வேண்டும்
பாதி சொன்னேன் மீதி கூற
தென்றல் இன்று தூது செல்லுமா
சொல்லடி என் தோழியே

கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
மன்னனிடம் போய் வர மங்கை நிலை கூறிட
தென்றல் இன்று தூது செல்லுமா
சொல்லடி என் தோழியே ஓ
சொல்லடி என் தோழியே

கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி