Gangai Karai Thottam

Gangai Karai Thottam Song Lyrics In English


கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே



கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன்

கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன்

என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான்


பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான்

கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை

கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை

கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ

நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா ஆஆஆ

கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே