Gangai Nathiyoram |
|---|
கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும்
தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும்
வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல
கங்கை நதி ஓரம்
ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
{ ஆஹாஹாஆஆஆ}
மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
மாணிக்கப் பாவை
நீ வந்த வேளை
நினையாததெல்லாம்
நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்
மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மணியோசை கேட்டு
மண மாலை சூட்டி
உறவான வாழ்க்கை
நலமாக வேண்டும்
நடமாடும் கோவில்
மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம்
விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும்
அணையாத தீபம்
ஆனந்த பூஜை
ஆரம்ப வேளை
கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை
தானும் தொடர்ந்தாள்
இருவர் : மெல்ல நடந்தாள்
ஆஹ ஹஹஹாஆஹ ஹஹஹா
