Gangai Ponguthe Kangal

Gangai Ponguthe Kangal Song Lyrics In English


கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம்

அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும் அதிர்ஷ்டம் இருக்கணும் வாழ்க்கை என்பது அதை இழந்து விட்டவள் எதற்கு வாழணும் கை அருகே முகர்வதற்கு முல்லை இருக்கும் அதை கரத்தாலே பறிப்பதற்கு வேலி தடுக்கும்

பொல்லாத ஆசைகளை வளர்த்ததென் மனம் அது பொய்க்கின்ற நேரத்திலே ஏன் வாடணும்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது


தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை தந்த இறைவா உன்னிடம் கேள்வி தொடர்ச்சியாகவே எத்தனை தோல்வி அதை தந்த இறைவா உன்னிடம் கேள்வி தருவது போல் ஆரம்பத்தில் ஏனோ தந்தாய் அதை அடைவதற்குள் பறித்துக் கொண்டு ஏனோ போனாய்

நடந்து விட்ட கதைகளையே நினைப்பதென் மனம் அதை நினைக்கின்ற நேரத்திலே ஏது ஆனந்தம்

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம் விழுந்த மாலையோ வாடிப் போனது நான் தொடுத்த மாலையோ உதிர்ந்து போனது

கங்கை பொங்குதே கண்கள் ஓரம் என் காலம் பாடுது துன்ப ராகம்