Geedhaara Kiliye |
---|
இசை அமைப்பாளர் : தர்புகா சிவா
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
ஆசை பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்
மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு
இருவிழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையாய் வீசு
மனம் நனைந்திட
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
உயிர் உருக்கிடும்
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
மாய கருவிழியால்
ஆளை வெல்வாயடி
பேசும் சிறுமொழியால்
காதல் சொல்வாயடி
ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு
பெருகியதே காதல் தான்
காதல் அலையா போல
வழிகிறதே தேடல் தான்
நதியை போல
உனை நினைக்கையில்
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
எது நீ
உயிரோ உடலோ
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ நினைவோ
நினைவோ(10)
கீதார கிளியே
கண்ணனின் கீதார கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவார தமிழே
தமிழே