Gokulathu Kanna

Gokulathu Kanna Song Lyrics In English


என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஹாஆஅஆஆஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆ

ஆசைக்கொரு ஆளானவன்
ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்

ஆடை அள்ளி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன்
பூஜைக்கின்று வந்தானவன்

அவன் உலா உலா உலா
தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா விழா
வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே நான் பாடுவேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே




ஆசைக்கொரு ஆளாகினான்
கீதை என்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்கு போராடினான்

ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரௌபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது நேரில்
திருவிழா விழா விழா விழா
ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே