Hey Azhagiya Penne |
---|
ஹுவா ஹுவா ஹு வா ஹா
ஹுவா ஹுவா ஹு வா ஹா
ஏ அழகிய பெண்ணே
என்னை என்ன செய்ய நினைத்தாய்
ஒரு கண்ணாடி மனதில்
கல் வீசி போனாய்
மண்ணுக்குள்ள வைத்த
விதையை போல
என் மனதுக்குள்
நீ வந்து பதிந்தாய்
போதும் போதும் போதும் போதும்
காதல் சோகம் உயிரே
அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
சின்ன காயமில்லையே
ரத்த கீறல் இல்லையே
ஆனால் ஓயவில்லையே வலி அய்யோ
ஒரு தாய கட்டையாய்
உடல் ஆடுகின்றதே
உன்னை தேடுகின்றதே
மனம் அய்யோ
ஒரு பூ மோதி
ஆகாயம் உடைகின்றதே
என் புலன் ஐந்தும் கரைகின்றதே
என் வாழ் நாளின் பொற்காலம்
தெரிகின்றதே
என் வயல் யாவும் விளைகின்றதே
அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
மின்மினி உன் ஒரு பார்வையால்
மின்னல் ஆகின்றதே
ஓ ஹோ ஓ சொல் ஒன்று
உன் வாய் தீண்டினால்
கவிதை ஆகின்றதே
ஒரு காட்டிலே
நான் போகிறேன்
என் திசையே நீ தானடி
என்னை தலை கீழாய்
செய்த பெண் காற்றே
என்னை தலை கீழாய்
செய்த பெண் காற்றே
என் எதிர்காலம்
உன் நிழலோரம்
அன்பே நீ ஓடி வா
அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
காயம் இல்லையே
கீறல் இல்லையே
ஓயவில்லையே
அய்யோ
என் கரை உடைகின்றதே
மடை போல் உன் ஞாபகம்
ஓ ஓ என் மனம் உரைகின்றதே
குளிர் காயும் மோகனம்
என்னவாகுமோ ஏதாகுமோ
என் வாழ்க்கை புதிரானது
சுகம் இனிமேலே
உன்னை வரைவேனே
எந்தன் இமை மேலே
உன்னை வரைவேனே
நாள் தவறாமல் தொட்டு
ரசிப்பேனே
நீதான் என் சுவாசமே
அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே
சின்ன காயமில்லையே
ரத்த கீறல் இல்லையே
ஆனால் ஓயவில்லையே வலி அய்யோ
ஒரு தாய கட்டையாய்
உடல் ஆடுகின்றதே
உன்னை தேடுகின்றதே
மனம் அய்யோ
ஒரு பூ மோதி
ஆகாயம் உடைகின்றதே
என் புலன் ஐந்தும் கரைகின்றதே
என் வாழ் நாளின் பொற்காலம்
தெரிகின்றதே
என் வயல் யாவும் விளைகின்றதே
அடி முள்ளே முள்ளே
காதல் முள்ளே
உன்னை குத்தி கொண்டேன்
நெஞ்சின் உள்ளே