Idhazh Mottu Virindhida |
---|
ஹாஹாஆஹாஹாஆஅ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை
விட்டு பறந்திடும்
காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ
முகம் குங்கும நிறமாமோ
எனை கண்டதும்
வந்து குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
சொன்ன சொல்லை மறந்தவர்
என்னை மறந்தவர்
யாரென தெரியாதோ
வர தாமதம் எதனாலோ
அது காதலின் குணமாமோ
இளம் தென்றலில் மணமாவாள்
அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
நான் வந்ததும் பனியாவாள்
ஏன் இன்றிவள் பகையானாள்
கொடி கண்டதும் கிளையாவார்
இசை வந்ததும் மொழியாவார்
மலர் கண்டதும் வண்டாவார்
கனி கண்டதும் கிளியாவார்
இள மலருக்கு கோபமும் வருமோ
வரும் வண்டுக்கு இது தெரியாதோ
அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
அதைக் கண்டது யார் என்ன கதையோ
இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
சித்திரப் பெண் பாவை
எனை கண்டதும்
வந்து குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
இங்கு கோபமும் வரலாமோ
வர தாமதம் எதனாலோ
அந்த வள்ளுவன் குறள் போலே
அவள் வகைக்கொரு சுவையாவாள்
கரும் கல்லினில் மணமாமோ
என்னை கண்டதும் இளகாதோ
அவர் கண்களும் சிறையாமோ
அதில் கன்னியர் இரையாமோ
இழை கல்லிலும் எடுப்பாரோ
அதை பின்னியும் முடிப்பாரோ
அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ
விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ
நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ
கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ
இருவர் : இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
முத்தமிழ் பயிராகும்
மனம் ஒத்து நடந்தோறுமித
உள்ளம் தனில் வைத்தது நெறியாகும்
இளம் காவியம் அரங்கேறும்
தென்றல் காற்றினில் சுரம் பாடும்
இருவர் : ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ
ஆஹ ஹாஹா ஒஹொஹோஆஹா