Ilamayin Kaatil |
---|
ஆஆஆஆ
ஆஆஆஆஆ
இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா
அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா
நதிகளில் விழுந்த
இலை எல்லாம்
நதி வழி செல்லும்
படகு தான்
விதி வழி
இணைந்து திரிகிறோம்
பறக்கவே வேண்டும்
சிறகு தான்
காற்றோடு
மெல்ல கைகோர்த்து
பல கதை பேசி நாம் நடக்கலாம்
இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா
அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா
ஓ யார் இவன் என்று
யார் இவள் என்று
தூரத்தில் பறவை பார்க்கிறதே
ஓ பாரங்கள் யாவும்
தூரமாய் ஓட
ஈரமாய் கண்கள் துளிர்க்கிறதே
அட நேற்று அது
ஓடி போனதே
வரும் நாளை எங்கேயோ உள்ளதே
இந்த நிமிடம்
நம் கையில் உள்ளதே
கொண்டாட உள் நெஞ்சம் சொல்லுதே
ஆண் மற்றும்
புது வசந்த காலம்
நம் கிளையில் தோன்றும்
வழி பாதை தோறும்
வண்ண பூ மனமே
பொன் விடியல் வரும் வானில்
பொறு மனமே
இளமையின் காட்டில்
முதுமையின் மூங்கில்
இசைகின்ற பாட்டு
கேட்கிறதா
அலை கடல் போல
அனுபவம் மோதி
இதயத்தில் சாரல்
அடிக்கிறதா
ஓஹோ நீ ஒரு பயணி
நான் ஒரு பயணி
பாதையோ ரொம்ப நீண்டதடி
ஓஹோ நீ ஒரு கனவு
நான் ஒரு கனவு
கண்களோ நம்மை வேண்டுதடி
சிறு பூவில் பனியாக
இருக்கலாம்
கடும் வெயிலில் கரைந்தாலும்
சிரிக்கலாம்
நம் இன்ப துன்பங்கள்
மறக்கலாம்
அடியோடு வேராக பிறக்கலாம்
ஆண் மற்றும்
சில கதைகள் தொடரும்
சில கதைகள் முடியும்
இது முடிந்த பிறகும்
இங்கு தொடர்கிறதே
இது விடைகள் கிடையாதா
விடுகதையே