Illarum Ondre Nallaram |
---|
இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா
காதல் என்றும் பாசம் என்றும்
கதையே கூறுவார்
நூறு வகையே பேசுவார்
காதல் என்றும் பாசம் என்றும்
கதையே கூறுவார்
நூறு வகையே பேசுவார்
அங்கே மங்கையர் உலகம்
பொம்மைகள் ஆகும்
மறு நாள் மாறுவார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா
இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
கண்கள் மூடிக்கிடப்பதனாலே
பெண்கள் தெய்வமா
வீட்டில் கல்லைப்போலே இருப்பதினாலே
பெண்கள் தெய்வமா
உயிர் ஜீவன் இல்லாமல் வாழ்வதினாலே
தெய்வம் பெண் என்றார்
இன்பச் செல்வம் பெண் என்றார்
மானம் என்பது பெண்களுக்கென்றால்
ஆண்களுக்கேனில்லை
ஒரு வார்த்தையினாலே களங்கம் பிறப்பது
மாதர்கள் படும் தொல்லை
இந்த நாட்டிலும் நீதியில்லை
தனி ஏட்டிலும் நீதியில்லை
ஆஆஆஆஆஆ
இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர்
வாழவும் விடமாட்டார்
பெண்ணை வாழவும் விடமாட்டார்
இந்தத் தொல்லையில்லாமல்
மறைவதென்றாலும்
சாகவும் விடமாட்டார்
அவரே சாகவும் விடமாட்டார்
அம்மாஅம்மாஅம்மா