Illatha Pillaikku |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பித்தாகி தொட்டில் ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்தேன் வைத்தாட்ட பிள்ளை இல்லை விலைக்கு விற்க யாருமில்லை
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட
இல்லாததொன்றுமில்லை இருந்தும் ஒரு பிள்ளை இல்லை பொல்லாத தெய்வங்கள் என் புலம்பலையும் கேட்கவில்லை
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட
கறிகரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளையில்லை நிறைக் குடத்து தண்ணீரை ஈன்றலைய பிள்ளையில்லை
மழை பெய்தோர் வாசலிலே மண் அலைய பிள்ளையில்லை மாக்கோலம் தனை அழிக்க மகன் ஒன்று எனக்கில்லை
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட
வாழை மரம் குலைத் தள்ளி வாழ்ந்த பயன் தான் அடையும்ஆ கோழியினம் பெற்ற பயன் குஞ்சுகளாய்தான் திரியும்ஆ
பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி ஏழை நான் என்ன பெற்றேன் இருள் நிறைந்த வாழ்க்கை இனி
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட எத்தனையோ பெயர் இருந்தும் எந்த பெயர் நான் சூட்ட
இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட