Inba Kanavondru |
---|
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
இன்பக் கனவொன்று
நானே கண்டேனடி
ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம்
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
பெண் மற்றும் ஹே
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆஆஆஆஆ
என் ஆபத்து காலத்தில்
காப்பாற்ற வந்தான்
ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான்
நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன்
இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பால் போல் நிலா வீசி காயும் என் மேலே
பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே
பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்
பெண் மற்றும் ஹே
ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
ஏலே லங்கடி லேலோ ஆஆஆஆஆஆ