Inbam Neruma En Vaazhvil |
---|
இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
இன்பம் நேருமா
என் வாழ்வில் இன்பம் நேருமா
துன்பம் தொடர்ந்து மேலும் மேலும்
சூழும் போதிலே
துன்பம் தொடர்ந்து மேலும் மேலும்
சூழும் போதிலே
அன்பு கொண்டே ஆதரிப்பார்
அன்பு கொண்டே ஆதரிப்பார்
யாருமே இல்லையே
அலைகடல் துரும்பாகவே
அலைகடல் துரும்பாகவே
ஆனேன் நான் இந்நாளிலே
இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா
இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே
ஒளி பரவும் உதயம் நிலவாதோ
இருள் மேவும் எந்தன் வாழ்வினிலே
ஒளி பரவும் உதயம் நிலவாதோ
புயற் காற்றினாலே துடிக்கும்
புயற் காற்றினாலே துடிக்கும்
கொடிபோலே நிலையும் ஆனதே
பகற் கனவாய்ப் போனதே
இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
இன்பம் நேருமா என் வாழ்வில்
இன்பம் நேருமா