Indha Boomiyilae

Indha Boomiyilae Song Lyrics In English


ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஓஒ ஓஒ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ
இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு
விளையாடும் ஆண்டவா
பட்ட பாடுகளே இங்கு போதும் என்று
உன்னை நாளும் வேண்டவா

என்னை கேட்டா என்னை படைத்தாய்
நெல்லை கேட்டா மண்ணில் விதைத்தாய்
என்னதான் நியாயமோ
உன்னை யார்தான் கேட்பது
என்னதான் மாயமோ
எங்கு நான் போவது

இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு
விளையாடும் ஆண்டவா

யாருக்கும் தந்தாய் இங்கு நீயென
உன்னை சான்றோர் தொழுதாலும்
யார் உந்தன் தந்தாய் என்று கேட்டதும்
இறைவா சொல் எந்த நாளும்

தகப்பன் யாரோ யார் அறிவாரோ
உண்மையில் நானும் உன்னை போலே
இறைவன் நீயும் படைத்த ஜீவன்
எத்தனைதானே என்னை போலே

நீதானே பாவ பட்ட
ஜென்மம் தந்தது
யாராலே மானம்கேட்ட
துன்பம் வந்தது
நாள் தோறும் நான் வாட
என்னதான் நியாயமோ
என்னதான் மாயமோ

இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு
விளையாடும் ஆண்டவா


வேருக்கு நீரை தந்து மேகத்தை
விளையும் பூ அறியாது
ஆனாலும் பூவுக்குள்ள வாசத்தை
பழிக்கும் ஊர் கெடையாது

நடந்து போன நிகழ்ச்சி யாவும்
மர்மங்கள் ஆனால் என்ன நீதி
உள்ளதை நீயும் உலகம் அறிய
சொல்லிடும் நாள்தான் எந்த தேதி

நான் இங்கே தென்றல் போலே
வாழ கூடாதா
தேன் ஊறும் ஓடம் போலே ஓட கூடாதா
என் தேவா நீயே சொல்
என்னதான் நியாயமோ
என்னதான் மாயமோ

இந்த பூமியிலே என்னை படைத்து விட்டு
விளையாடும் ஆண்டவா
பட்ட பாடுகளே இங்கு போதும் என்று
உன்னை நாளும் வேண்டவா

என்னை கேட்டா என்னை படைத்தாய்
நெல்லை கேட்டா மண்ணில் விதைத்தாய்
என்னதான் நியாயமோ
உன்னை யார்தான் கேட்பது
என்னதான் மாயமோ
எங்கு நான் போவது