Indha Mamavukku |
---|
இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்
தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்
இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்
இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
நான் பட்ட பாடு என்ன சொல்ல
நூலாகிப் போனேன் மெல்ல மெல்ல
தாலி கட்டி வந்த தாரமுன்னு பேரு
வாடி நின்னேன் பல நாளு
வீட்டுக்கு வீடு வாசப்படி
வெக்கத்த விட்டு ஆளப் புடி
ஆம்பளதான் ஒரு கல்லுப் புள்ளையாரு
அசச்சிடத்தான் வழி பாரு
சிவகாமி உன் ஆசாமி
உன் பின்னோடு வர
அடியே இதுதான் சமயம்
புடவ தலப்புல புருஷன் அடங்கிடுவான்
இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
சாமத்தில் கூட காத்திருந்தோம்
சாமந்திப் பூவா பூத்திருந்தோம்
வாடியம்மா இப்ப வந்திடுச்சு வேள
ஆனந்தம்தான் இனி மேல
வேலைக்குப் போயி வீடு வரும்
ஆணுக்கு எப்போ மூடு வரும்
குளிப்பாட்டி அத கொண்டு வர வேணும்
சரண்டருதான் எந்த ஆணும்
பூவோடு உன் பாவாட
ஓர் போதைதான் தரும்
மயிலே இளமான் குயிலே
மடி மேல் விழுந்தவன் மறு நாள் எழுந்திடுவான்
இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்
தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்
இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்
இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா