Indru Namathullame Pongum |
---|
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே
மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே
இருவர் : இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா
நேற்று நம்மைக் கண்ட நிலா நெஞ்சுருகிச் சென்ற நிலா
ஆஅஆஆ இனி வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே
வாழ்த்துகள் சொல்லுமே மனந்தனைக் கிள்ளுமே
வள்ளுவன் வழியினிலே இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே
இருவர் : திரு வள்ளுவன் வழியினிலே
இனி வாழ்க்கை ரதம் செல்லுமே
கண்ணிலே ஊறும் நீரும் இனி
நம் நிலைகாண நாணும்
சுகம் கவிதை பாடிவரும்
ஆஅஆஅஆஅஆஅஆஆ
சுகம் கவிதை பாடிவரும்
கவலைகள் மறையவே கொண்ட கடனும் தீரவே
அன்னை கருணை கூர்ந்ததே
காலமெனும் பந்தலில்
அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே
இருவர் : காலமெனும் பந்தலில் அன்புக்
கைகள் ஒன்று சேர்ந்ததே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
ஆஆஆஅஆஅஆஅஆஅஆ
பொங்கும் புது வெள்ளமே
ஆஆஆஅஆஅஆஅஆஅஆ
இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே