Ingey Deivam Pathi |
---|
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
ஆஅஆஅஆஆஹாஆஆஆஆ
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆஹா உருவம் ஆனதடா
ஒஹோ ஹோ உருவம் ஆனதடா
ஆஆஆ
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
பெண் ஆஹா உருவம் ஆனதடா
ஓஹோ உருவம் ஆனதடா
ஆஆஆஆஆஆஅ
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அனைவரும் : அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசில்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா
ஆஆஆஆஆஆஅ
தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்தில் ஆசையடா
ஆஆஆஆஆஆஅ
ஹாஆஆஆஆஅ
இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா
அனைவரும் : எதிலும் ஓட்டை சொல்லுமடா
நாட்டில் வாட்டம் வந்து சேரும் போது
கூட்டம் கூடுமடா
அனைவரும் : ஒன்றாய் பாட்டு பாடுமடா
ஆஆஆஆஆஆஅ
ஹாஆஆஆஆஅ
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அனைவரும் : அதிலே உள்ளம் பாதி
கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
முகத்தில் பாதி வாயிருக்கும்
முழ நீளம் நாக்கிருக்கும்
முதுகிலே கண்ணிருக்கும்
மூளையிலே மண்ணிருக்கும்
ஆஆஆஆஆஆஅ
ஹாஆஆஆஆஅ
மனத்திலே பேயிருக்கும்
மறையாத நோயிருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால் மட்டும் இல்லையடா
ஹ ஹ ஹ சபாஷ்
அனைவரும் : இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா