Iniya Thendrale |
---|
இனிய தென்றலே
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
தரையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்
ஆ ஆ கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கருமையான கூந்தல்
நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்ன என்று சொல்வது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ