Innum Oru Iravu

Innum Oru Iravu Song Lyrics In English


இன்னும் ஓர் இரவு
இன்னும் ஓர் நிலவு இன்னும்
ஓர் நினைவு இதோ இதோ
எதிரில் இருந்து பயமுறுத்து

இன்னும் சில தூரம்
இன்னும் சில பாரம் இன்னும்
சில தூரம் இதோ இதோ
எதிரில் இருந்து என்னை
துரத்து

போய் பார்க்க
யாரும் இல்லை வந்து
பார்க்கவும் யாரும் இல்லை
வழிப்போக்கனும் வருவான்
போவான் வழிகள் எங்கும்
போகாது விழியோடு நீயும்
நானும் வாழ்ந்த காலம்
சாகாது

காலடி சத்தம்
எழும்பும்வரை குப்பை
மேட்டில் படுத்திருந்தேன்
கடைசியாய் சிரித்தது
எப்போது ஞாபகம் இல்லை
இப்போது

நதியில் விழுந்த
இலைகளுக்கு மரங்கள்
அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும்
வரை வேதனை அதற்கு
புரியாது

உயிருடன் இருப்பது
இப்போதெல்லாம் வலித்தால்
மட்டும் தெரியும் உன்னுடன்
நானும் இல்லை என்பது
விழித்தால் மட்டுமே புரியும்

ஆஆ இத பாரு
ஆனந்தி இப்ப நான் குடிக்கறது
பேரு கஞ்சா கோவிச்சுக்காத
வேற வழி இல்ல ஏன்னா
இதோட இன்னொரு பேரு
வந்து சிவபானம் நான் சிவனா
இருக்கறதனால குடிக்க வேண்டி
இருக்கு நான் ஏன் சிவன் ஆயிட்டேனா
இந்த உலகத்துல யாரு வாழலாம்
யாரு சாகலாம்க்ற முடிவு எடுக்கற
அதிகாரம் என் கிட்ட இருக்கறதனால
நான் சிவன் ஆயிட்டேன் நான் சிவன்
ஆனதுனால என்ன ஆச்சு நீ என்
பக்கத்துல இல்லனாலும் நீ என்
பாதி ஆயிட்ட பார்வதி ஆயிட்ட
சோ கம் வி வில் கோ இன்
ஹவ் அ டான்ஸ்

நேற்று ஒரு நகரத்தில்
கண்ணாடி பெட்டகத்தில்
வைரம் ஒன்றை பார்த்தேன்
வைரம் ஒன்றை பார்த்தேன்


அவள் கண்கள் ஞாபகம்
வந்ததடா அவள் கண்கள் ஞாபகம்
வந்ததடா வைரம் வாங்கப் பணம்
இல்லை இருந்தும் எனக்கு பயம்
இல்லை கடைக்காரனை கொன்று
விட்டேன் கையில் எடுத்து வந்து
விட்டேன்

முன்பு ஒரு பயணத்தில்
விண்மீன் உறங்கும் நேரத்தில்
புடவை ஒன்றை பார்த்தேனே
தங்கப் புடவை ஒன்றை
பார்த்தேனே

மேல் உடல் ஞாபகம்
வந்ததடி உன் உடல் ஞாபகம்
வந்ததடி

புடவை வாங்கவும்
காசில்லை பெரிதாய்
அலட்டிக் கொள்ளவில்லை
புடவைக்காரனை கொன்று
விட்டு கையில் எடுத்து
வந்து விட்டேன்

காதல் நெஞ்சில்
வந்து விட்டால் காசும்
பணமும் தேவை இல்லை

கடவுளாக மாறி
விட்டால் கொலைகள்
செய்வதில்
குற்றம் இல்லை