Intha Mamanoda Manasu

Intha Mamanoda Manasu Song Lyrics In English


இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட
ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

அக்காளின் மகளுக்கு
கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற
ஆசைய நான் முடிப்பேன்

விரும்பியது இந்நேரம்
கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது

எல்லோர்க்கும் நினைத்தது போலே
மண வாழ்க்கை வாய்த்திடாது

எப்போதும் ஒருவனை
எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை
கண்டு பிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும்
நேரம் கூட

மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை


மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பொன்னான நகைகளும்
மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு
நன்றியை நானுரைபேன்

எனக்கு அன்று சொல்லாத
உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்

கல்யாண கனவுகள் யாவும்
கையில் சேரும் நேரம் ஆகும்

பல்லாண்டு படித்திடும்
ஊர் முழுதும்
வண்டாட்டம் பறந்திடும்
வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில்
ஊஞ்சலாட

மாமனோட
ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது