Intha Nadagam |
---|
பாலும் பழமுமென
ஒன்றாக சேர்த்தார் பாதி
வழி சென்றவளை மறுபடியும்
அழைத்தார் கண் கொடுத்து
கண் பறித்தாய் கானம்
வைத்தாயே தாயே
கலாலானவளை கன்னி
போல் ஆக்கி விட்டாய்
இந்த நாடகம் அந்த
மேடையில் எத்தனை
நாளம்மா இன்னும்
எத்தனை நாளம்மா
இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா
அவர் இரவையும்
பகலையும் ஒன்றாய்
காண்பது எத்தனை
நாளம்மா அம்மம்மா
எத்தனை நாளம்மா
இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா
வானும் நிலவும்
பிரிந்தே இருப்பது எத்தனை
நாளம்மா அம்மா எத்தனை
நாளம்மா இதில் மற்றொரு
வானம் நிலவை கேட்பது
எத்தனை நாளம்மா அம்மா
எத்தனை நாளம்மா
இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா
நிலை கண்ணாடியில்
முகத்தை மறைப்பது எத்தனை
நாளம்மா அவர் நெய்யை பால்
போல் எண்ணி இருப்பது எத்தனை
நாளம்மா அம்மா எத்தனை
நாளம்மா
கட்டிய தாலியை
கண்ணுக்கு மறைப்பது
எத்தனை நாளம்மா இதில்
மற்றொரு தாலிக்கு
மாப்பிள்ளை பார்ப்பது
எத்தனை நாளம்மா
அம்மம்மா எத்தனை
நாளம்மா
இந்த நாடகம்
அந்த மேடையில்
எத்தனை நாளம்மா
இன்னும் எத்தனை
நாளம்மா
நாடகம் ஆடிடும்
நாயகி நீயே என்னையும்
நாடகம் ஆட வைத்தாயே
என் கதி எப்படி ஆயினும்
நீயே என் உயிர் துணைவரை
காத்திருப்பாயே