Intha Poovukoru Arasan |
---|
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
மெல்ல மெல்ல பூத்து வரும்
உன் முகத்தை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா
உன் இரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்
பொங்குகிற ஓடை ஒன்னு
பக்கத்திலே நிக்கையிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு
உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்
காதோரம் ஆசை ஆசையாய்
கதை பேசும் காலம்தான் இது
ஏதேதோ பேசி பேசியே
என்னை நீங்கி கூச்சம் போனது
ஒரு வாரம் ஒரு மாதம்
உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்
போதும் ஏகாந்தம்
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே